செய்திகள்

நகையை பறித்த திருடனை துரத்தி பிடித்த சிறுவன் - சென்னை காவல் ஆணையர் பாராட்டு

Published On 2018-04-19 08:50 GMT   |   Update On 2018-04-19 08:50 GMT
சென்னை அண்ணாநகரில், பெண் மருத்துவரிடம் செயின் பறித்தவரை துரத்திச் சென்று பிடித்த சிறுவன் சூர்யாவுக்கு, சென்னை காவல்துறை சார்பில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்தார்.
சென்னை:

சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் கிளினிக்கில் பணிபுரியும் பெண் மருத்துவரிடமிருந்து மர்மநபர் ஒருவர் தங்க சங்கிலியை பறித்துச் சென்றார். மருத்துவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த சூர்யா என்ற சிறுவன் திருடனை துரத்தியுள்ளான். சிறிது தூரம் சென்ற உடன் திருடனை சூர்யா மடக்கிப்பிடித்து நகைகளை கைப்பற்றினான்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்ப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடனை கைது செய்தனர். விசாரணையில் திருடன் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இந்நிலையில், சூர்யாவின் தைரியத்தை பாராட்டும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார். சூர்யாவின் செயல் மற்றும் தைரியம், மன உறுதிக்கு எனது பாராட்டுக்கள் என கூறினார். #tamilnews

Tags:    

Similar News