செய்திகள்

ஊத்தங்கரையில் தனியார் பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது

Published On 2018-04-17 11:07 GMT   |   Update On 2018-04-17 11:07 GMT
ஊத்தங்கரையில் தனியார் பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பெரியபொம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32). இவர் கல்லாவி சாலையில் சென்ற போது பின்பக்கம் அதிவேகமாக வந்த தனியார் பேருந்தை வழிமறித்து கண்டக்டர் அருளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் நடத்துனரை தாக்கியுள்ளார். இது குறித்து நடத்துனர் அருள் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார் புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News