செய்திகள்

பேராசிரியை நிர்மலாதேவியின் 3 செல்போன்கள் பறிமுதல்

Published On 2018-04-17 07:45 GMT   |   Update On 2018-04-17 07:45 GMT
கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் இன்று அவர் பயன்படுத்தி வந்த 3 செல்போன்களை கைப்பற்றினார்கள்.
சென்னை:

கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் இன்று அவர் பயன்படுத்தி வந்த 3 செல்போன்களை கைப்பற்றினார்கள். அந்த செல்போன்களில் யார்-யார் தொலைபேசி நம்பர்கள் உள்ளன? என்ற பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.

சமீபகாலத்தில் எந்தெந்த முக்கிய பிரமுகர்களிடம் பேசி வந்தார், எவ்வளவு நேரம் பேசினார் என்ற விவரமும் முழுமையாக பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News