செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே நண்பர்களுடன் மைனர் பெண்ணை கடத்திய வாலிபர்

Published On 2018-04-16 13:30 GMT   |   Update On 2018-04-16 13:30 GMT
ஆண்டிப்பட்டி அருகே மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரபு. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 படித்து வரும் மைனர் பெண்ணை சம்பவத்தன்று காரில் கடத்திச் சென்றுள்ளார். இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆசை, அவரது மனைவி சத்யா, பிரகாஷ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இது குறித்து அந்த மாணவியின் தாய் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பிரபு உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News