search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைனர் பெண் கடத்தல்"

    வடமதுரை அருகே மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே பாடியூரைச் சேர்ந்தவர் குமார். இவர் கோவையில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே மில்லில் மதுரையைச் சேர்ந்த 16 வயது பெண்ணும் பணிபுரிந்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் நெருங்கி பழக ஆரம்பித்தனர்.

    இருவரும் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தனர். எனவே 2 பேரும் கோவையை விட்டு வெளியேறி வடமதுரை அருகே உள்ள பாடியூருக்கு வந்தனர். மைனர் பெண்ணை குமார் கடத்தி வந்ததால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து 2 பேரையும் வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர்.

    மகள் மாயமானது குறித்து மதுரை போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். எனவே 2 பேரையும் மதுரைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகே திருமணத்திற்கு மைனர் பெண்ணை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே உத்தமபாளையம் ஆனைமலை யான்பட்டி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த 17 வயது இளம்பெண் தனது தோழி வீட்டிற்கு சென்றபோது மாயமானார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மைனர்பெண்ணை தேடி வந்தனர்.

    இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் போடி அருகே உள்ள சிலமலை மணியம்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த அர்ஜூனன் (வயது24) என்பவர்தான் மைனர் பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அர்ஜூனனை போலீசார் கைது செய்தனர். சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    வடமதுரையில் மைனர் பெண்ணை கடத்திய மில் வேன் டிரைவர் குறித்து பெண்ணின் தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள செங்குறிச்சி மாமரத்து பட்டியைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண் வேல்வார்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இதே மில்லில் அய்யலூர் குளத்துப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 22) என்பவர் வேன் டிரைவராக உள்ளார்.

    வேனில் தொழிலாளர்களை அழைத்து வரும் போது அந்த பெண்ணுக்கு கார்த்திக்குடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று வேலைக்கு வந்த பெண்ணை கார்த்திக் கடத்தி சென்று விட்டார். இது குறித்து பெண்ணின் தாய் பெருமாயி வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். மைனர் பெண் என்பதால் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வேன் டிரைவர் கார்த்திக்கை எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

    நிலக்கோட்டை அருகே மைனர் பெண்ணை கடத்திய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டையை சேர்ந்த 15 வயது மைனர் பெண் போடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கிருந்து மீண்டும் சொந்த ஊருக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை ஒரு கும்பல் நோட்டமிட்டு வந்தது.

    வத்தலக்குண்டு பகுதியில் பஸ் வந்த போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மைனர் பெண்ணிடம் நைசாக பேசினர். இதில் மயங்கிய அந்த பெண்ணை அவர்கள் கடத்தி சென்றனர். உறவினர் வீட்டுக்கு சென்ற மகள் வீடு திரும்பாததால் தந்தை அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    பின்னர் தெரிந்த நண்பர்களிடம் விசாரித்த போது அந்த பெண்ணை செங்கோட்டையை சேர்ந்த இளங்கோவன், கார்த்திக், குமரேசன் ஆகியோர் கடத்தி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து கடத்தி சென்ற மைனர் பெண் மற்றும் அந்த கும்பலை தேடி வருகிறார்கள்.

    தேனி அருகே திருமணத்திற்கு மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி அருகே வாழையாத்துப்பட்டி ஊர்காவலன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது19). இவர் போடி திருமலாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார்.

    பின்பு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். அந்த பெண்ணை ஸ்ரீவில்லிபுத்தூர் அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் மேட்டுப்பாளையம் அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக உறவு கொண்டுள்ளார். மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    எங்கும் கிடைக்காததால் போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த ரஞ்சித்தை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை அருகே மைனர் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள சிங்காரகோட்டை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பெண் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் மகன் தங்கபாண்டி (21) என்பவர் கடந்த 2 வருடங்களாக அவரை காதலித்து வந்துள்ளார்.

    இந்த விபரம் பெண்ணின் தாயாருக்கு தெரியவரவே தனது மகளை விடுதி மில்லிலேயே தங்க வைத்தார். இருந்த போதும் தங்கபாண்டி அவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்று தனி அறையில் தங்க வைத்து பல முறை பலாத்காரம் செய்து உள்ளார்.

    தனது மகள் விடுதியில் இருந்து வெளியே சென்ற விபரம் தெரியவரவே பல இடங்களில் தேடிப் பார்த்தார். அப்போது தங்கபாண்டி அவரை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தேவி மைனர் பெண்ணை கடத்தி கற்பழித்த தங்கபாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கல்லூரி மாணவி மற்றும் மைனர் பெண் கடத்தப்பட்டது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    சோழவந்தானை சேர்ந்த 15 வயதுடைய மைனர் பெண் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் திடீர் என மாயமானார். இதனால் பதட்டமடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். பலன் இல்லை.

    இதுகுறித்து அவர்கள் சோழவந்தான் போலீசில் புகார் செய்தனர். அதில், எனது மகளிடம் திருமண ஆசைவார்த்தை கூறி எங்கள் பகுதியை சேர்ந்த சபரிமுத்து (19) என்பவர் கடத்தி சென்று விட்டார். அவரிடம் இருந்து எங்களது மகளை மீட்டுத்தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியையும், அவளை கடத்தியவரையும் தேடி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கச்சிராயிருப்பைச் சேர்ந்தவர் முத்துராமன். இவரது மகள் சினேகா (19). கல்லூரி மாணவியான இவர் சம்பவத்தன்று மாயமானார்.

    இதுகுறித்து அவரது பெற்றோர் காடுபட்டி போலீசில் புகார் செய்தனர். அதில், எனது மகளை எங்கள் பகுதியில் வசிக்கும் நந்தீஸ்வரன் மகன் மதன் (25) என்பவர் கடத்திச் சென்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி அருகே மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேவதானப்பட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் பாவனா (வயது 16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் செந்தில் (24) என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பாவனாவின் தந்தை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாவனாவின் இருக்கும் இடம் தெரிந்து அங்கு சென்று தன்னுடன் வருமாறு கூறினார்.

    ஆனால் பாவனா அதற்கு மறுப்பு தெரிவித்து தான் செந்திலை திருமணம் செய்து கொண்டதாகவும் எனவே அவருடனேயே வசிப்பதாகவும் கூறினார். பாவனாவின் தந்தை இது குறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் செந்தில் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதிச்சியத்தில் மைனர் பெண்ணை கடத்தியதாக வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மதிச்சியம் பகுதியில் 17 வயது சிறுமி 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று அவரது பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். அவர்கள் வீடு திரும்பியபோது சிறுமி வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் அவளை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மதிச்சியம் போலீசில் சிறுமியின் தாய் புகார் செய்தார். அதில், ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த சூர்யா என்ற வாலிபர் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுமியையும், அவளை கடத்தியதாக வாலிபரையும் தேடி வருகின்றனர்.

    ×