search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழவந்தான்-வாடிப்பட்டியில் கல்லூரி மாணவி- மைனர் பெண் கடத்தல்
    X

    சோழவந்தான்-வாடிப்பட்டியில் கல்லூரி மாணவி- மைனர் பெண் கடத்தல்

    கல்லூரி மாணவி மற்றும் மைனர் பெண் கடத்தப்பட்டது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    சோழவந்தானை சேர்ந்த 15 வயதுடைய மைனர் பெண் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் திடீர் என மாயமானார். இதனால் பதட்டமடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். பலன் இல்லை.

    இதுகுறித்து அவர்கள் சோழவந்தான் போலீசில் புகார் செய்தனர். அதில், எனது மகளிடம் திருமண ஆசைவார்த்தை கூறி எங்கள் பகுதியை சேர்ந்த சபரிமுத்து (19) என்பவர் கடத்தி சென்று விட்டார். அவரிடம் இருந்து எங்களது மகளை மீட்டுத்தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியையும், அவளை கடத்தியவரையும் தேடி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கச்சிராயிருப்பைச் சேர்ந்தவர் முத்துராமன். இவரது மகள் சினேகா (19). கல்லூரி மாணவியான இவர் சம்பவத்தன்று மாயமானார்.

    இதுகுறித்து அவரது பெற்றோர் காடுபட்டி போலீசில் புகார் செய்தனர். அதில், எனது மகளை எங்கள் பகுதியில் வசிக்கும் நந்தீஸ்வரன் மகன் மதன் (25) என்பவர் கடத்திச் சென்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×