என் மலர்
செய்திகள்

தேவதானப்பட்டி அருகே மைனர் பெண்ணை கடத்தி வாலிபர் திருமணம்
தேனி:
தேவதானப்பட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் பாவனா (வயது 16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் செந்தில் (24) என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாவனாவின் தந்தை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாவனாவின் இருக்கும் இடம் தெரிந்து அங்கு சென்று தன்னுடன் வருமாறு கூறினார்.
ஆனால் பாவனா அதற்கு மறுப்பு தெரிவித்து தான் செந்திலை திருமணம் செய்து கொண்டதாகவும் எனவே அவருடனேயே வசிப்பதாகவும் கூறினார். பாவனாவின் தந்தை இது குறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் செந்தில் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.