செய்திகள்
நெல்லை அருகே ஏட்டு தற்கொலை முயற்சி
நெல்லை அருகே செல்போனில் பெண்ணுடன் ஆபாசமாக பேசியது அம்பலமானதால் ஏட்டு தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் ரெயில்வே பீடர் ரோடு பகுதியை சேர்ந்தவர் வனமுத்து. இவரது மகன் கருத்த பாண்டி (வயது 39). கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் இவர் தற்போது குடும்பத்துடன் சேர்ந்தமரத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கருத்தபாண்டி நேற்று சேர்ந்தமரம் அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருத்தபாண்டி தற்கொலைக்கு முயன்றது ஏன்? என சேர்ந்தமரம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விபரம் வருமாறு:-
கடையநல்லூர் பகுதியில் கருத்தபாண்டி பணியில் இருந்தபோது அங்கு பைக்கில் மணல் கடத்தி சென்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அந்த வாலிபரின் மனைவி கருத்தபாண்டியிடம் எனது கணவரை விட்டுவிடுங்கள் என கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்தபாண்டி அந்த பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கிவைத்து கொண்டு அடிக்கடி பேச்சு கொடுத்துள்ளார். சில சமயங்களில் ஆபாசமாகவும் பேசினாராம். இதை செல்போனில் பதிவு செய்த அந்த பட்டதாரி இளம்பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரிடம் சென்று எனக்கு செல்போனில் ஆபாசமாக பேசி ஏட்டு கருத்தபாண்டி தொந்தரவு செய்கிறார் எனக்கூறி செல்போன் பேச்சு பதிவுகளை அவரிடம் கொடுத்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதனால் அவமானம் அடைந்த கருத்தபாண்டி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் ரெயில்வே பீடர் ரோடு பகுதியை சேர்ந்தவர் வனமுத்து. இவரது மகன் கருத்த பாண்டி (வயது 39). கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் இவர் தற்போது குடும்பத்துடன் சேர்ந்தமரத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கருத்தபாண்டி நேற்று சேர்ந்தமரம் அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருத்தபாண்டி தற்கொலைக்கு முயன்றது ஏன்? என சேர்ந்தமரம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விபரம் வருமாறு:-
கடையநல்லூர் பகுதியில் கருத்தபாண்டி பணியில் இருந்தபோது அங்கு பைக்கில் மணல் கடத்தி சென்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அந்த வாலிபரின் மனைவி கருத்தபாண்டியிடம் எனது கணவரை விட்டுவிடுங்கள் என கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்தபாண்டி அந்த பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கிவைத்து கொண்டு அடிக்கடி பேச்சு கொடுத்துள்ளார். சில சமயங்களில் ஆபாசமாகவும் பேசினாராம். இதை செல்போனில் பதிவு செய்த அந்த பட்டதாரி இளம்பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரிடம் சென்று எனக்கு செல்போனில் ஆபாசமாக பேசி ஏட்டு கருத்தபாண்டி தொந்தரவு செய்கிறார் எனக்கூறி செல்போன் பேச்சு பதிவுகளை அவரிடம் கொடுத்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதனால் அவமானம் அடைந்த கருத்தபாண்டி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.