செய்திகள்

கலைசேவையில் 40 ஆண்டுகள்: விஜயகாந்துக்கு பாராட்டு விழா நாளை நடக்கிறது

Published On 2018-04-14 11:25 GMT   |   Update On 2018-04-14 11:25 GMT
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின், கலையுலகின் 40-ஆம் ஆண்டு பாராட்டு விழா மாநாடு காஞ்சீபுரம் படப்பை ரோடு, கரசங்களில் நாளை காலை 11 மணியளவில் தொடங்குகிறது. #vijayakanth

சென்னை:

தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின், கலையுலகின் 40-ஆம் ஆண்டு பாராட்டு விழா மாநாடு காஞ்சீபுரம் மாவட்டம், படப்பை ரோடு, கரசங்களில் நாளை காலை 11 மணியளவில் மங்கள வாத்தியம் முழங்க நிகழ்ச்சி தொடங்குகிறது.

கலை நிகழ்ச்சி, பட்டி மன்றம் நடைபெற உள்ளன. மாலை 6 மணிக்கு மேல் சினிமா நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கலை உலகைச் சார்ந்த பிரமுகர்கள் என அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews #vijayakanth

Tags:    

Similar News