செய்திகள்

வரதட்சணை தராததால் மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்

Published On 2018-04-04 09:52 GMT   |   Update On 2018-04-04 09:53 GMT
கூடுதல் வரதட்சணை தராததால் மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
குள்ளனம்பட்டி:

கரூர் அருகே தான்தோன்றிமலையை சேர்ந்தவர் சண்முகம். அவரது மகள் அனிதாபிரியா. இவருக்கும் திண்டுக்கல் அருகே சீலப்பாடியை சேர்ந்த ராமச்சந்திரன். போஸ்ட்மேனாக திண்டுக்கல் தலைமை தபால் நிலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ரஞ்சித்குமார் என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ரஞ்சித்குமார் தூத்துக்குடியில் உள்ள என்ஜீனியரிங் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். திருமணமான முதலே மாமனார் ராமச்சந்திரன் மருமகளிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதற்கு அவரது குடும்பத்தாரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

மகன் தூத்துக்குடியில் வேலை பார்ப்பதால் வீட்டில் தனியாக இருக்கும் மருமகளிடம் ராமச்சந்திரன் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும் செக்ஸ் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார். இதனை தனது கணவரிடம் அனிதாபிரியா தெரிவித்தும் ரஞ்சித்குமார் இதனை கண்டுகொள்ளவில்லை.

இதனால் தனது பெற்றோரிடம் தெரிவிக்க முடியாமல் அனிதாபிரியா மிகுந்த மனவேதனையில் இருந்தார்.

மாமனாரின் கொடுமைகள் அதிகமாகி சம்பவத்தன்று அனிதாபிரியாவை கணவர் குடும்பத்தினர் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயமடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அனிதாபிரியா திண்டுக்கல் தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்ச்செல்வி, மருமகளை தாக்கிய மாமனார், கணவர், மாமியார் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Tags:    

Similar News