செய்திகள்
கண்ணமங்கலத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கண்ணமங்கலத்தில் கம்யூனிஸ்டு ரெயில் மறியல்- 20 பேர் கைது

Published On 2018-04-04 06:17 GMT   |   Update On 2018-04-04 06:17 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கண்ணமங்கலத்தில் கம்யூனிஸ்டு ரெயில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரையும் கைது செய்தனர்.

கண்ணமங்கலம்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் கடத்தும் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

விவசாய சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் ரெயில் நிலையத்தில் இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்பாடியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பயணிகள் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

ஆரணி டி.எஸ்.பி செந்தில் கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 20 பேரையும் கைது செய்தனர். #tamilnews

Tags:    

Similar News