செய்திகள்

சூலூர் அருகே பேராசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு

Published On 2018-03-28 11:30 GMT   |   Update On 2018-03-28 11:30 GMT
சூலூர் அருகே பேராசிரியர் வீட்டில் நகை மற்றும் பணம் திருட்டு போனது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர்:

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள மேற்கு அரசூரை சேர்ந்தவர் செந்தில் (30). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டிலும் செந்திலும் அவரது தாய் மாணிக்கமும் இருந்து வந்தனர்.சம்பவத்தன்று செந்தில் வேலைக்கு சென்று விட்டார். அவரது தாய் வெளியில் சென்று இருந்தார். பின்னர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் உள்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

மாணிக்கம் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஒரு பீரோவின் சாவி அங்கு வைக்கப்பட்டு இருந்தது.

அதனை மர்ம நபர்கள் எடுத்து திறந்துள்ளனர். மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 4 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் ரொக்கப்பணம், 5 கிராம் வெள்ளி ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.செந்தில் தாய் மாணிக்கம் வெளியில் செல்வதை நோட்டமிட்டு இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்தது. இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

சூலூர் பகுதியில் கடந்த 2 மாதங்களில் இது போன்று 4 திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Tags:    

Similar News