செய்திகள்

திண்டுக்கல் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

Published On 2018-03-23 15:25 GMT   |   Update On 2018-03-23 15:25 GMT
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். #RajiniMakkalMandram
திண்டுக்கல்:

ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக கடந்த 15–ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் மாவட்ட பொறுப்பாளராக அரவிந்தும், செயலாளராக தம்புராஜூம் என நிர்வாகிகளின் பெயர் இடம் பெற்று இருந்தன. 

இந்த நிலையில் பட்டியல் வெளியான 7 நாட்களிலேயே மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தம்புராஜை ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்வதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.ஆர். அரவிந்த், மாவட்ட செயலாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட, நகர, பேரூராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களாக தொடர்வோம் என்றும் கூறியுள்ளனர். 

திண்டுக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தம்புராஜ் நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் அனைவரும் ரஜினியிடம் ராஜினாமா கடிதத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். 
Tags:    

Similar News