செய்திகள்

தஞ்சையில் மகள் வீட்டுக்கு சென்ற தந்தை ஆட்டோ மோதி பலி

Published On 2018-03-19 11:58 GMT   |   Update On 2018-03-19 11:58 GMT
தஞ்சையில் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் மகள் வீட்டுக்கு சென்ற தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சை வடக்குவீதியை சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது 65). இவரது மனைவி வசந்தகுமாரி (62). இவர்கள் தஞ்சை எல்.ஐ.சி. காலனியில் உள்ள மகள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது பின்னால் வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் சிங்காரவேலும், வசந்தகுமாரியும் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிங்காரவேலு பரிதாபமாக இறந்தார். வசந்தகுமாரி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்குப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோதி மகாலிங்கம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News