செய்திகள்

காலாப்பட்டு அருகே முதியவர் தற்கொலை

Published On 2018-03-02 09:48 GMT   |   Update On 2018-03-02 09:48 GMT
காலாப்பட்டு அருகே நோய் கொடுமையால் முதியவர் வி‌ஷ இலையை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

சேதராப்பட்டு:

காலாப்பட்டு அருகே தமிழக பகுதியான மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தில்லை. (வயது 72). இவர் கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரியில் காண்பித்தும் நோய் குணமாகவில்லை.

இந்த நிலையில் சம்பவத்தன்று நோய் கொடுமை அதிகமானதால் தில்லை மனமுடைந்தார். தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர் வி‌ஷ இலையை பறித்து தின்றுவிட்டர்.

இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தில்லை நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News