செய்திகள்

துபாயில் இருந்து சென்னை விமானத்தில் கடத்திய ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்

Published On 2018-02-27 23:24 GMT   |   Update On 2018-02-27 23:24 GMT
துபாயில் இருந்து சென்னை விமானத்தில் கடத்திய ரூ.2 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். #Chennaiairport #Goldseized
சென்னை:

துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது முகமது மொகயிதீன், அஹம்மது சபீர் ஆகியோரை அதிகாரிகள் சோதனை செய்த போது அவர்கள் செல்போன் கவரில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

இதையடுத்து இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் கடத்தி வந்த 6.40 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. #Chennaiairport #Goldseized #tamilnews
Tags:    

Similar News