செய்திகள்
75 சதவீத மானியத்துடன் மோட்டார் சைக்கிள் வழங்க கோரி வழக்கு
சென்னை உயர்நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 75 சதவீத மானியத்துடன் மோட்டார் சைக்கிள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை:
மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தின் தலைவராக இருப்பவர் நம்புராஜன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
‘வேலைக்கு செல்லும் பெண்கள் சுலபமாக சென்று வர, அவர்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்படி, ஸ்கூட்டருக்குரிய மொத்த விலையில் 50 சதவீதம் தொகையை தமிழக அரசு மானியம் வழங்குகிறது.
இந்த மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை மாற்றுத் திறனாளிகளுக்கும் பயனளிக்கும் விதமாக ஸ்கூட்டருக்கு கூடுதலாக 25 சதவீதம், அதாவது 75 சதவீத மானியம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
பின்னர், இந்த வழக்கை தான் விசாரிக்க முடியாது என்றும் உரிய நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்றும் ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். #Tamilnews
மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தின் தலைவராக இருப்பவர் நம்புராஜன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
‘வேலைக்கு செல்லும் பெண்கள் சுலபமாக சென்று வர, அவர்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்படி, ஸ்கூட்டருக்குரிய மொத்த விலையில் 50 சதவீதம் தொகையை தமிழக அரசு மானியம் வழங்குகிறது.
இந்த மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை மாற்றுத் திறனாளிகளுக்கும் பயனளிக்கும் விதமாக ஸ்கூட்டருக்கு கூடுதலாக 25 சதவீதம், அதாவது 75 சதவீத மானியம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
பின்னர், இந்த வழக்கை தான் விசாரிக்க முடியாது என்றும் உரிய நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்றும் ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். #Tamilnews