செய்திகள்
நெல்லை அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது
நெல்லை அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள அருகன்குளம் பகுதியில் சிலர் மோட்டார்சைக்கிளில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து தாழையூத்து சப்இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஜடாயு தீர்த்தம் பகுதியில் சாக்கில் 4 மூட்டைகளில் மணல் கடத்தி வந்த அருகன்குளம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன்(49) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளும், 4 மூட்டை மணலும் பறிமுதல் செய்யப்பட்டன. #tamilnews