கிருமாம்பாக்கத்தில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை
பாகூர்:
கிருமாம்பாக்கம் நரம்பை சுனாமி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 57). மீனவர். இவரது மனைவி கிருஷ்ணவேணி.
இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஆறுமுகத்துக்கு குடிப்பழக்கம் உள்ளதால் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
தகராறு அதிகமாகவே கிருஷ்ணவேணி கணவர் ஆறுமுகத்தை திட்டினார். இதில், ஆறுமுகம் மன முடைந்த நிலையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ஆறுமுகம் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அவரை காணாமல் அக்கம் பக்கத்தில் தேடி வந்த நிலையில் அவர் பழைய வீட்டில் தூக்கில் தொங்கினார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆறுமுகத்தை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews