செய்திகள்

திருமங்கலம் அருகே தொழிலாளி வீட்டில் 10 பவுன் கொள்ளை

Published On 2018-02-14 11:17 GMT   |   Update On 2018-02-14 11:17 GMT
திருமங்கலம் அருகே கட்டிட தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள வடகரை காமிக்ஸ் 3-வது தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் நாகேசுவரன் (வயது 35) கட்டிட தொழிலாளி.

நேற்று இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி யும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார்.

இதனை நோட்டமிட்ட யாரோ மர்ம மனிதர்கள் வீட்டின் வெளிபக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

மதியம் வீடு திரும்பிய நாகேசுவரனின் மனைவி, கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது நகை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசில் நாகே சுவரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News