செய்திகள்

ஆரணியில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Published On 2018-01-21 11:14 GMT   |   Update On 2018-01-21 11:14 GMT
தமிழக அரசு பஸ் கட்டணம் உயர்த்தியதை கண்டித்து ஆரணியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆரணி:

ஆரணி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு பஸ் கட்டண உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் வினோத்குமார் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் ஏழை எளிய நடுத்தரவர்க்த்தினர் இந்த பஸ் கட்டண உயர்வால் பேரும் பாதிப்புக்குள்ளா கியுள்ளனர். எந்தவித முன் அறிவிப்பின்றி இப்படி தமிழக அரசு பஸ் கட்டணம் உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது எனவே தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் ஜெயவேல், முன்னாள் எம்.எல்.ஏ ராஜாபாபு, வழக்கறிஞர் சியாம்சுந்தர் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #tamilnews

Tags:    

Similar News