செய்திகள்

குன்னம் அருகே விஷம் குடித்த முதியவர் மரணம்

Published On 2018-01-20 18:05 GMT   |   Update On 2018-01-20 18:05 GMT
குன்னம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மங்களமேடு:

குன்னம் அருகே உள்ள திருமாந்துறையை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 68). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) மதுவில் கலந்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார். 

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் விஸ்வநாதனை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை விஸ்வநாதன் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News