செய்திகள்
செம்மாண்ட குப்பம் அருகே கட்டிட மேஸ்திரி மனைவி தற்கொலை
செம்மாண்ட குப்பம் அருகே கட்டிட மேஸ்திரி மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் செம்மாண்ட குப்பம் அருகே உள்ள எஸ்.கொட்டாவூர் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சிவானந்தத்தின் மனைவி ரம்யா (வயது 28). இவர் பூச்சி மருந்தை குடித்து விட்டார்.
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று இரவு 8 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.