செய்திகள்

வாணியம்பாடி அருகே குடிசை வீடு எரிந்து பெண் பலி

Published On 2018-01-20 11:32 GMT   |   Update On 2018-01-20 11:32 GMT
வாணியம்பாடி அருகே குடிசை வீடு எரிந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாணியம்பாடி:

வாணியம்பாடி அருகே சொரக்காயல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராதா(45) இவரது மகன் திருப்பதி இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் படுத்து உறங்கி கொண்டிருந்த போது திடீரென மின் கசிவு ஏற்பட்டு குடிசையில் தீ பிடித்தது.

இதை கண்ட திருப்பதி அதிர்ச்சியடைந்து வீட்டில் இருந்து வெளியே தப்பினார்.

பின்னர் தனது தாய் ராதாவை காப்பாற்ற முயற்சி செய்து முடியாமல் போனது.

இது குறித்து வாணியம்பாடி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் ராதா உடல் கருகி இறந்தார்

வாணியம்பாடி தாலுகா போலீசார் ராதாவின் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News