செய்திகள்

நெல்லையில் ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி

Published On 2018-01-19 12:39 GMT   |   Update On 2018-01-19 12:39 GMT
நெல்லையில் செல்போனை நண்பர் அபகரித்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை:

நெல்லை சந்திப்பு உடையார்பட்டியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(வயது35) ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் குமார்(35). சண்முகசுந்தரம் புதிதாக ஒரு விலை உயர்ந்த செல்போன் வாங்கியிருந்தார்.

சம்பவத்தன்று சண்முகசுந்தரத்துக்கும், குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் சண்முகசுந்தரத்தை தாக்கிய குமார் அவரது செல்போனை அபகரித்து சென்றதாக தெரிகிறது.

பின்னர் வீட்டுக்கு சென்ற சண்முகசுந்தரத்திடம் அவரது பெற்றோர் செல்போனை பற்றி கேட்டு கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த சண்முகசுந்தரம் திடீரென்று வி‌ஷத்தை குடித்துவிட்டார்.

உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி சந்திப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்தனர். #tamilnews

Tags:    

Similar News