செய்திகள்

தினகரன் - திவாகரனை கைது செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Published On 2018-01-18 07:36 GMT   |   Update On 2018-01-18 07:36 GMT
ஜெயலலிதா மரணத்தை வைத்து விளம்பரம் தேடுகின்ற மலிவான செயலில் ஈடுபடும் தினகரன், திவாகரனை கைது செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை:

அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமி‌ஷன் அமைத்து விட்ட பிறகு யாராக இருந்தாலும் விசாரணை கமி‌ஷனில்தான் தகவல் சொல்ல வேண்டும். விசாரணை கமி‌ஷனுக்கு தெரிவிக்காமல் வெளியே சொல்வது மிகப்பெரிய குற்றம்.

அம்மாவை வைத்து விளம்பரம் தேடுகின்ற மலிவான செயலில் திவாகரனும், தினகரனும் செயல்படுகிறார்கள்.

விசாரணை கமி‌ஷன் அமைத்த பிறகு இவர்கள் எல்லாவற்றையும் வெளியில் சொல்கிறார்கள். வீடியோ வெளியிடுகிறார்கள். அதேபோல் திவாகரன் ஒரு கருத்து சொல்கிறார். அம்மாவை வைத்து அவர்கள் அரசியல் செய்கிறார்கள்.

எனவே விசாரணை ஆணையம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்து திவாகரனையும், தினகரனையும் கைது செய்து உண்மைகளை கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Tags:    

Similar News