செய்திகள்

ஜெ. மரணம் தொடர்பான எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: திவாகரன்

Published On 2018-01-17 16:37 GMT   |   Update On 2018-01-17 16:37 GMT
ஜெயலலிதா டிசம்பர் 4-ம் தேதியே இறந்து விட்டார் என பரபரப்பு கருத்து கூறிய சசிகலா சகோதரர் திவாகரன் தற்போது, தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். #JayalalithaDeath #Dhivakaran
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் இன்று மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சகோதரரான திவாகரன் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி அன்று மாலை 5.15 மணிக்கு பிரிந்ததாகவும், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனை குழுமத்துக்கு சொந்தமான மருத்துமனைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்ட பின்னர், மறுநாள் 5-ம் தேதி தாமதமாக அவரது மரண செய்தி அறிவிக்கப்பட்டதாகவும் சசிகலா சகோதரர் திவாகரன் பேசினார்.

இந்நிலையில், தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார். டிசம்பர் 4-ம் தேதி மாலை ஜெயலலிதா கிளினிக்கல் ரீதியில் மரணமடைந்தார். பயாலஜிக்கல் மரணம் ஏற்படாமல் தடுக்க உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது என திவாகரன் கூறியுள்ளார். #TamilNews #JayalalithaDeath #Dhivakaran
Tags:    

Similar News