செய்திகள்

எம்.ஜி.ஆர் நினைவு தினம்: நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை

Published On 2017-12-24 03:44 GMT   |   Update On 2017-12-24 03:44 GMT
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 30-வது நினைவு தினத்தை ஒட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
சென்னை:

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 30-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, மதிமுக தலைவர் வைகோ மற்றும் பல்வேறு அரசியல் இயக்கங்களை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தினர்.
Tags:    

Similar News