கோவை:
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மருதபள்ளத்தை சேர்ந்தவர் வேலுசாமி. கூலித் தொழிலாளி. இவரது மகள் சுருதி (வயது 18).
இவர் கோவை உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். சுருதி தந்தை கல்லூரி கட்டணம் செலுத்துவதற்கு பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனை நினைத்து சுருதி மிகுந்த மனவேதனை அடைந்தார்.
சம்பவத்தன்று இவர் பொள்ளாச்சியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு சென்றார். அங்கு வைத்து தன்னால் தனது தந்தை சிரமப்படுவதை நினைத்து வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுருதி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.