செய்திகள்

பரமக்குடி அருகே இளம்பெண் கடத்தல்: வாலிபர் மீது புகார்

Published On 2017-12-19 14:42 GMT   |   Update On 2017-12-19 14:42 GMT
பரமக்குடி அருகே இளம்பெண்ணை கடத்தியது தொடர்பாக தந்தை கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் சவுந்தர்யா (வயது 19). இவர் கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

இவரும், போகலூரை சேர்ந்த சீனிமுகமது மகன் அஜீஸ்ரகுமான் (22) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சவுந்தர்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, கல்லூரி படிப்பையும் நிறுத்தினர். இதனால் அவர் வீட்டில் இருந்து வந்தார்.

சுப்பிரமணியன் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார். இந்த நிலையில் சவுந்தர்யா திடீரென மாயமானார்.

இதுகுறித்து சுப்பிரமணியன் சத்திரக்குடி போலீசில் புகார் செய்தார். அதில் எனது மகளை அஜீஸ் ரகுமான் கடத்தி சென்று விட்டார். அவரிடம் இருந்து மகளை மீட்டுத் தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News