செய்திகள்
ஆம்பூரில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
வயிற்று வலி காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் மளிகை தோப்பு பகுதியை சேர்ந்தவர் பூபதி பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. அவரது மனைவி வெண்ணிலா (வயது 30). இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.
வெண்ணிலா ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். வெண்ணிலாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வேலையில் இருந்து வீட்டுக்கு வந்த வெண்ணிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பூபதி ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெண்ணிலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் டவுன் மளிகை தோப்பு பகுதியை சேர்ந்தவர் பூபதி பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. அவரது மனைவி வெண்ணிலா (வயது 30). இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.
வெண்ணிலா ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். வெண்ணிலாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வேலையில் இருந்து வீட்டுக்கு வந்த வெண்ணிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பூபதி ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெண்ணிலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.