செய்திகள்

மீனவர்களை மீட்க கோரி சென்னையில், நாளை காங். ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

Published On 2017-12-12 05:33 GMT   |   Update On 2017-12-12 05:33 GMT
ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க வலியுறுத்தி சென்னையில் நாளை காங்கிரஸ் போராட்டம் நடத்தப் போவதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களில் பலர் இன்றுவரை கரை திரும்பவில்லை. அவர்களின் நிலை என்ன வாயிற்று என்று இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து மத்திய-மாநில அரசுகள் கவலைப்படுவதாக தெரியவில்லை.

பாதிக்கப்பட்ட மீனவர்களை எடப்பாடி பழனிசாமி இதுவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூட சொல்லவில்லை. மத்திய-மாநில அரசுளின் மீனவர் விரோத போக்கை கண்டித்து நாளை (புதன்கிழமை) சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் நானும் பங்கேற்க உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News