செய்திகள்

சென்னை, எர்ணாகுளம் இடையே சுவிதா சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2017-12-12 03:54 GMT   |   Update On 2017-12-12 03:54 GMT
கூட்ட நெரிசலை தவிர்க்கும் சென்னை, எர்ணாகுளம் இடையே சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கீழ்க்கண்ட சிறப்பு ரெயில் இயக்கப்படுகின்றன.

* சென்னை சென்டிரல்-எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரெயில்(வண்டி எண்:82631), வரும் 22-ந்தேதி இரவு 8 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

* சென்னை சென்டிரலில்-சந்திரகாச்சி அதிவேக சிறப்பு ரெயில்(02842), அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8,15,22,29 மற்றும் பிப்ரவரி 5,12,19,26 ஆகிய தேதிகளில் மாலை 6.20 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 11.30 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.

* எர்ணாகுளம்-சென்னை சென்டிரல் சுவிதா சிறப்பு ரெயில்(06006), வரும் 21-ந்தேதி இரவு 7.25 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News