செய்திகள்

மதுரவாயல் அருகே குட்கா பதுக்கிய குடோன் கண்டுபிடிப்பு

Published On 2017-11-28 09:23 GMT   |   Update On 2017-11-28 09:23 GMT
மதுரவாயல் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கிய குடோனை போலீசார் கண்டுபிடித்தனர்.

போரூர்:

மதுரவாயல் அய்யாவு நகரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இன்று காலை அப்பகுதியில் உள்ள குடோனில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு ஒரு டன் எடை கொண்ட ஏராளமான குட்கா பொருட்கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சப்ளை செய்ய பயன்படுத்தி வந்த இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.15லட்சத்திற்கும் மேல் இருக்கும் என தெரிகிறது.

அங்கிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த விஜய், ஈரோட்டைச் சேர்ந்த ராஜேஷ், சென்னை அய்யப்பந்தாங்கலைச் சேர்ந்த கனகலிங்கம் ஆகியோரை கைது செய்தனர். குட்கா பொருட்கள் சப்ளை செய்து வரும் உரிமையாளரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News