செய்திகள்
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள் இன்று அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை:
மதுரை மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள் இன்று அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசு மருத்துவர்களுக்கும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்காமல் நடைபெற்ற நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும். அரசு பணிகளில் உள்ள காலியிடங்களை வெளிப்படையாக அறிவித்து மருத்துவர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வை முறையாக நடத்த வேண்டும்.
காலி பணியிடங்களை போட்டி தேர்வு நடத்தி நிரப்ப வேண்டும். அரசு பணிக்கு தேர்வாகும் டாக்டர்கள் முதல் 2 ஆண்டுகள் கிராமப் புறங்களிலும், பிறகு தாலுகா மருத்துவமனைகளிலும் பணியமர்த்தப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் அருணாசலம், கமலேஷ், கண்ணன் மற்றும் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள் இன்று அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசு மருத்துவர்களுக்கும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்காமல் நடைபெற்ற நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும். அரசு பணிகளில் உள்ள காலியிடங்களை வெளிப்படையாக அறிவித்து மருத்துவர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வை முறையாக நடத்த வேண்டும்.
காலி பணியிடங்களை போட்டி தேர்வு நடத்தி நிரப்ப வேண்டும். அரசு பணிக்கு தேர்வாகும் டாக்டர்கள் முதல் 2 ஆண்டுகள் கிராமப் புறங்களிலும், பிறகு தாலுகா மருத்துவமனைகளிலும் பணியமர்த்தப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் அருணாசலம், கமலேஷ், கண்ணன் மற்றும் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.