செய்திகள்

புளியறையில் கேரள லாட்டரி சீட்டு கடத்தி வந்த 2 பேர் கைது

Published On 2017-11-24 12:06 GMT   |   Update On 2017-11-24 12:06 GMT
புளியறையில் கேரள லாட்டரி சீட்டு கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் புளியறை சோதனை சாவடி வழியாக சிலர் கேரள லாட்டரி சீட்டுக்களை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் போலீசார் கார் மற்றும் பஸ்களில் சந்தேகப்படும்படி செல்பவர்களை சோதனை செய்து வந்தனர்.

அப்போது வீரவ நல்லூரைச் சேர்ந்த பெருமாள் (வயது 48) என்பவர் 360 லாட்டரி சீட்டுக்களை கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த லாட்டரி சீட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்து, பெருமாளை கைது செய்தனர்.

இதுபோல கடையநல்லூரைச் சேர்ந்த பால்ராஜ்(49) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 168 லாட்டரி சீட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். அவருடன் வந்த கடையநல்லூர் போஸ், சேட் ஆகிய 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News