செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1071 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 960 கன அடியாக குறைந்தது. இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து 1071 கன அடியாக இருந்தது.
சேலம்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.
இதற்கிடையே கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 960 கன அடியாக குறைந்தது. இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து 1071 கன அடியாக இருந்தது.
அணையின் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 7 ஆயிரம் கன அடி தண்ணீரும், மேட்டூர் அணை கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 900 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
அணையில் இருந்து 7,900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அணைக்கு வரும் தண்ணீர் பல மடங்கு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று 80.08 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் சரிந்து 79.47 அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கூடுதல் மழை பெய்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.
இதற்கிடையே கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 960 கன அடியாக குறைந்தது. இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து 1071 கன அடியாக இருந்தது.
அணையின் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 7 ஆயிரம் கன அடி தண்ணீரும், மேட்டூர் அணை கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 900 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
அணையில் இருந்து 7,900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அணைக்கு வரும் தண்ணீர் பல மடங்கு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று 80.08 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் சரிந்து 79.47 அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கூடுதல் மழை பெய்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.