செய்திகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த முதியவர் சுருண்டு விழுந்து பலி

Published On 2017-11-23 17:19 GMT   |   Update On 2017-11-23 17:19 GMT
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த 70 வயது முதியவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
சேலம்:

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மருத்துவ பிரிவு உள்ளது. இதன் அருகே நோயாளிகள் காத்திருப்பு கூடம் உள்ளது. இன்று காலை மருத்துவ சிகிச்சைக்காக வந்த சுமார் 70 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் நோயாளிகள் காத்திருப்பு கூடத்தில் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார்.

அங்குள்ள ஒரு சிலப்பின் மேல் அமர்ந்திருந்த அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதை பார்த்த அங்கிருந்த மற்ற நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனை ஊழியர்கள் அங்கு வந்து இந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவர் அடிக்கடி சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு வந்ததாகவும், அதே போல் இன்று காலை சிகிச்சைக்கு வந்து டாக்டருக்காக காத்திருந்த போது திடீரென இறந்தார் என்றும் அங்கிருந்தவர்கள் கூறினர்.
Tags:    

Similar News