செய்திகள்

மேல்மருவத்தூரில் 12 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2017-11-21 05:00 GMT   |   Update On 2017-11-21 05:00 GMT
சபரிமலை சீசன், தைப்பூச விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூரில் 12 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சபரிமலை சீசன், தைப்பூசம் ஆகிய விழாக்களை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக வருகிற 13-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ந்தேதி வரை கீழ்க்கண்ட ரெயில்கள் இருமார்க்கமாகவும் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும்.

மலைக்கோட்டை, வைகை, பாண்டியன், பொதிகை, சாம்பர்க் கிரான்டி, திருக்குறள், மன்னை, லோக்மான்ய திலக்-மதுரை, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்-மதுரை எக்ஸ்பிரஸ்(வண்டி எண்:22623), புவனேஸ்வர்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், உத்தரபிரதேச மாநிலம் மண்டுவாடி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 12 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இரு மார்க்கமாகவும் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News