செய்திகள்
ரூ. 15 லட்சம் கடனுக்கு 90 லட்சம் கேட்டு மிரட்டல்: திருப்பூர் கலெக்டரிடம் மனு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தாராபுரத்தை சேர்ந்த கணவன், மனைவி ரூ.15 லட்சம் கடனுக்கு 90 லட்சம் கேட்டு வக்கீல் மிரட்டல் விடுத்ததாக மனு அளித்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம தாராபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஜான்சிராணி. இவர் தனது கணவருடன் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தார்.அதில் கூறி இருப்பதாவது-
கடந்த 2009-ம் ஆண்டு தாராபுரத்தை சேர்ந்த வக்கீல் ஒருவரிடம் ஒரு ரூபாய் வட்டிக்கு 15 லட்சம் கடன் வாங்கினோம். அதற்கு மாதம் ரூ. 15 ஆயிரம் வட்டி கட்டி வந்தோம்.இந்த நிலையில் வயதான எனது மாமியார் நல்லமணியை ஏமாற்றி பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வீட்டை எழுதி வாங்கி கொண்டனர். தற்போது வீட்டை காலி செய்யும் படி கூறுகிறார்கள். இல்லாவிட்டால் ரூ. 90 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.
திருப்பூர் மாவட்டம தாராபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஜான்சிராணி. இவர் தனது கணவருடன் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தார்.அதில் கூறி இருப்பதாவது-
கடந்த 2009-ம் ஆண்டு தாராபுரத்தை சேர்ந்த வக்கீல் ஒருவரிடம் ஒரு ரூபாய் வட்டிக்கு 15 லட்சம் கடன் வாங்கினோம். அதற்கு மாதம் ரூ. 15 ஆயிரம் வட்டி கட்டி வந்தோம்.இந்த நிலையில் வயதான எனது மாமியார் நல்லமணியை ஏமாற்றி பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வீட்டை எழுதி வாங்கி கொண்டனர். தற்போது வீட்டை காலி செய்யும் படி கூறுகிறார்கள். இல்லாவிட்டால் ரூ. 90 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.