செய்திகள்

திருவாரூர் தே.மு.தி.க. பிரமுகர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி

Published On 2017-11-19 17:45 GMT   |   Update On 2017-11-19 17:45 GMT
மோட்டார் சைக்கிள் விபத்தில் தே.மு.தி.க. பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:

திருவாரூர் சேந்தமங்கலம் பகுதி ஜி.எம்.சி. நகரை சேர்ந்தவர் சுகுமார் (வயது 48). இவர் தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர். ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். இவர்களுடைய மகள் சுஜிதா. நேற்றுமுன்தினம் சுகுமார் திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகள் சுஜிதாவை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சேந்தமங்கலம் என்ற இடத்தில் சென்றபோது சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் நிலைதடுமாறி சுகுமார் கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த சுகுமாரை அக்கம் பக்கதினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகுமார் பரிதாபமாக இறந்தார்.

விபத்தில் காயமின்றி சுஜிதா தப்பினார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News