செய்திகள்

ஊத்தங்கரை அருகே பெங்களூரு சென்ற அரசு பஸ்- லாரி மோதல்: 15 பயணிகள் காயம்

Published On 2017-11-17 17:25 GMT   |   Update On 2017-11-17 17:25 GMT
ஊத்தங்கரை அருகே இன்று பெங்களூரு சென்ற அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 15 பயணிகள் காயம் அடைந்தனர்.

மத்தூர்:

திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கு அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பஸ்சில் 34 பயணிகள் இருந்தனர்.

இந்த பஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த திருவண்ணாமலை மெயின்ரோட்டில் வந்தபோது இந்த பஸ்சும், ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் பஸ்சும், லாரியும் சேதம் அடைந்தன. பஸ்சில் பயணம் செய்த 15 பயணிகள் காயம் அடைந்தனர். இதில் 12 பேர் சிகிச்சை பெற்று திரும்பி விட்டனர். 3 பேர் மட்டும் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News