search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus lorry crash"

    சூளகிரி அருகே அதிகாலையில் சொகுசு பஸ் - லாரி மோதிய விபத்தில் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியனர்.
    சூளகிரி:

    சென்னையில் இருந்து தனியார் சொகுசு பஸ் ஒன்று 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு பெங்களூரை நோக்கி புறப்பட்டது. பஸ்சானது கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோபசந்திரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் சென்ற போது, குஜராத்தில் இருந்து கிரானைட் சிலாப் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரியை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி சாலையில் ஒரு திருப்பத்தில் திருப்பிய போது எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் பஸ் மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

    பின்னர், அக்கம் பக்கத்தினர் காயமாடைந்த மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் லாரியை ஓட்டிய டிரைவர் இடிபாடுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த பழனிசாமி (வயது 52) என்பது தெரியவந்தது. மேலும், இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 30 பயணிகளும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். 
    முசிறி அருகே பஸ்சும் லாரியும் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    முசிறி:

    அரியலூரில் இருந்து நாமக்கல் நோக்கி சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. முசிறி அருகே உமையாள்புரத்தில் சென்ற போது, திருச்சியில் இருந்து முசிறி நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராத விதமாக லாரியின் பின்னால் மோதியது. 

    இதில் பஸ்சில் பயணம் செய்த சேலத்தை சேர்ந்த கலைசெல்வி, முருகன், முத்து, துவரங்குறிச்சி சேர்ந்த சக்திவேல், தொட்டியம் மணி, திருவையாறு சந்திரசேகர், ஆகிய 6 பேரும் காயமடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவர் நாமக்கல் அடுத்த காளி செட்டிபட்டியை சேர்ந்த சுந்தரராஜன்(53) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல் அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

    திண்டுக்கல்:

    நெல்லையில் இருந்து கோவை நோக்கி 50 பயணிகளுடன் அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ் திண்டுக்கல் - பழனி சாலையில் பாலம் ராஜக்காபட்டி அருகே இன்று பிற்பகலில் வந்தது. அப்போது எதிரே பெருந்துறையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த லாரி பயங்கரமாக பஸ் மீது மோதியது. விபத்தை தவிர்ப்பதற்காக அரசு பஸ் டிரைவர் சாலையோரம் திருப்பிய போது அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    உடனே பஸ்சில் இருந்த பயணிகள் உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர். இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் 15 பேர் படுகாயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார். மாணவிகள் உள்பட 17 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    ராமநாதபுரம்:

    ராமேசுவரத்தில் இருந்து இன்று காலை தென்காசிக்கு அரசு பஸ் புறப்பட்டது. டிரைவர் அருள்சேவியர் பஸ்சை ஓட்டிச் சென்றார். பஸ்சில் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் 40-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

    திருப்புல்லாணி சோதனை சாவடி அருகே பஸ் வந்தபோது தூத்துக்குடியில் இருந்து எந்திரங்களை ஏற்றி கொண்டு திருச்சி சென்ற கனரக லாரி எதிரே வந்தது. அந்த லாரி எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. அதில் இருந்த 50 வயது பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பஸ் டிரைவர் அருள்சேவியர், மாணவிகள் பவித்ரா, முனீசுவரி, பரமே சுவரி உள்பட 17 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் திருப்புல்லாணி போலீசார் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினரும் சம்பவ இடம் வந்து பஸ்சுக்குள் சிக்கி காயம் அடைந்தர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் காயம் அடைந்த மாணவிகள், திருநெல்வேலியில் உள்ள புனித ஜோசப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். விடுதியில் தங்கி படிக்கும் அவர்கள் விடுமுறைக்கு ஊருக்கு வந்து விட்டு திரும்பும்போது தான் விபத்தில் சிக்கி உள்ளனர்.

    விபத்து காரணமாக ராமநாதபுரம்- கீழக்கரை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×