செய்திகள்

மோகனூர் அருகே குடும்ப தகராறு தொழிலாளி தற்கொலை

Published On 2017-11-17 11:28 GMT   |   Update On 2017-11-17 11:28 GMT
மோகனூர் அருகே குடும்ப தகராறு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஆர்.சி.பேட்டை பாளையத்தை சேர்ந்தவர் ஜான்வின்சென்ட் கென்னடி (வயது 45). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கலா(40). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கென்னடிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளளது. இதனால் அடிக்கடி மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வருவதாக தெரிகிறது. சம்பாதிக்கும் பணத்தில் கென்னடி மது குடித்து செலவழிப்பதால் மனம் வேதனை அடைந்த மனைவி கலா கண்டித்துள்ளார். எனினும் அவர் கேட்கவில்லை. இதனால் வீட்டில் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த கென்னடி தனது சொந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மோகனூர் இன்ஸ்பெக்டர் சுகுமார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News