செய்திகள்

ராயக்கோட்டையில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Published On 2017-11-10 14:50 GMT   |   Update On 2017-11-10 14:50 GMT
ராயக்கோட்டை டவுன் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த 4 பேரை கைது செய்தனர்.
ராயக்கோட்டை:

ராயக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் ராயக்கோட்டை டவுன் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ராயக்கோட்டை ரெயில் நிலையம் பின்புறம் உள்ள புளிய மரத்தடியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ராயக்கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 32), சரவணன் (38), எல்லப்பன் (40), நாகராஜ் (37) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

இதேபோல ராயக்கோட்டை போலீசார், பஸ் நிலையம் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்த அயர்னப்பள்ளி ஊராட்சி நல்லராலப்பள்ளியைச் சேர்ந்த எல்லப்பன் (47) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராயக்கோட்டை கீழ்தெருவைச் சேர்ந்தவர் முனிராஜ் (42). இவர் ராயக்கோட்டை தொலைபேசி அலுவலகம் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீசார் அங்கு சென்று அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த முனிராஜை கைது செய்தனர்.
Tags:    

Similar News