செய்திகள்

மதுரையில் ஆசிரியர் பயிற்சி மாணவி கடத்தப்பட்டாரா?: போலீசார் விசாரணை

Published On 2017-11-10 10:47 GMT   |   Update On 2017-11-10 10:48 GMT
மதுரையில் ஆசிரியர் பயிற்சி மாணவி மாயமானது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை ஒத்தக்கடை மிதாஸ் நகரைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் பாண்டிச்செல்வி (21). இவர் மதுரையில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

ஆசிரியர் பயிற்சிக்காக உலகனேரி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பாண்டிசெல்வி பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்தார்.

நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற பாண்டி செல்வி வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை.

இது குறித்து நாகராஜன் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பாண்டிச்செல்வி கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News