செய்திகள்
கொடைரோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி
கொடைரோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கொடைரோடு:
நிலக்கோட்டை அருகே உள்ள ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் சோனை (வயது 47). கூலித் தொழிலாளி. இவர் இன்று தனது மோட்டார் சைக்கிளில் வாடிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். கல்லடிப்பட்டி பிரிவில் சென்ற போது சோழவந்தானில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார் அவர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சோனை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் அம்மையநாயக்கனூர் போலீசார் அங்கு விரைந்து வந்து இறந்தவர் உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை அருகே உள்ள ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் சோனை (வயது 47). கூலித் தொழிலாளி. இவர் இன்று தனது மோட்டார் சைக்கிளில் வாடிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். கல்லடிப்பட்டி பிரிவில் சென்ற போது சோழவந்தானில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார் அவர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சோனை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் அம்மையநாயக்கனூர் போலீசார் அங்கு விரைந்து வந்து இறந்தவர் உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.