செய்திகள்
மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண்-சிறுவன் பலி
மதுரையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு பெண் மற்றும் சிறுவன் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மதுரை:
மதுரை பேச்சியம்மன் படித்துறையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி தேவி (வயது 38). காய்ச்சலால் அவதிப்பட்ட தேவி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவி பரிதாபமாக இறந்தார்.
மதுரை பாஸ்டின் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் கிருஷ்ணராஜ் (10). டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணராஜ் சிகிச்சை பலனின்றி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தான்.
மதுரை பேச்சியம்மன் படித்துறையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி தேவி (வயது 38). காய்ச்சலால் அவதிப்பட்ட தேவி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவி பரிதாபமாக இறந்தார்.
மதுரை பாஸ்டின் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் கிருஷ்ணராஜ் (10). டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணராஜ் சிகிச்சை பலனின்றி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தான்.