செய்திகள்
பொள்ளாச்சி அருகே தங்கை கணவரை அடித்து கொன்ற பெண் மகனுடன் கைதானார்
நெகமம் அருகே கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் அடுத்த ஜல்லிப்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார் (35). காமநாயக்கன் பாளையத்தில் உள்ள விசைத்தறியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு ராதாமணி என்ற மனைவியும், தமிழரசு (8), ராமன் (5), லட்சுமணன் (5) ஆகிய 3 மகன்களும் உள்ளனர். சசிக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. நேற்று மாலை குடிபோதையில் வந்த அவர் தனது மாமனார் வெங்கிட்டானிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.
இதனை ராதாமணியின் அக்காள் நாகம்மாள், அவரது கணவர் செல்வராஜ், மகன்கள் அருண்குமார், சதிஷ்குமார் ஆகியோர் கண்டித்துள்ளனர்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பு உருவானது. சசிக்குமாரை நாகம்மாள், அவரது கணவர் செல்வராஜ், மகன்கள் அருண்குமார், சதிஷ்குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கினார்கள். இதில் சசிக்குமார் பலத்த காயம் அடைந்தார். அவரை பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். தாக்குதலில் காயம் அடைந்த அருண்குமார் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து நெகமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பொள்ளாச்சி டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கொலை தொடர்பாக நாகம்மாள், அவரது மகன் கதிஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் அடுத்த ஜல்லிப்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார் (35). காமநாயக்கன் பாளையத்தில் உள்ள விசைத்தறியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு ராதாமணி என்ற மனைவியும், தமிழரசு (8), ராமன் (5), லட்சுமணன் (5) ஆகிய 3 மகன்களும் உள்ளனர். சசிக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. நேற்று மாலை குடிபோதையில் வந்த அவர் தனது மாமனார் வெங்கிட்டானிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.
இதனை ராதாமணியின் அக்காள் நாகம்மாள், அவரது கணவர் செல்வராஜ், மகன்கள் அருண்குமார், சதிஷ்குமார் ஆகியோர் கண்டித்துள்ளனர்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பு உருவானது. சசிக்குமாரை நாகம்மாள், அவரது கணவர் செல்வராஜ், மகன்கள் அருண்குமார், சதிஷ்குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கினார்கள். இதில் சசிக்குமார் பலத்த காயம் அடைந்தார். அவரை பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். தாக்குதலில் காயம் அடைந்த அருண்குமார் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து நெகமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பொள்ளாச்சி டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கொலை தொடர்பாக நாகம்மாள், அவரது மகன் கதிஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.