செய்திகள்

உத்தமபாளையம் அருகே முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்

Published On 2017-10-21 11:27 GMT   |   Update On 2017-10-21 11:27 GMT
உத்தமபாளையம் அருகே முன் விரோதத்தில் வாலிபரை தாக்கிய கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி:

உத்தமபாளையம் அருகே அணைப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த சாலையப்பன் என்பவரது வீட்டை எட்டி பார்த்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று சாலையப்பன் தனது நண்பர்களுடன் சென்று சிவக்குமாரை தாக்கி உள்ளார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பம் அருகே கோம்பை ரோடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது உறவினர் ஜெகதீஸ். இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று ஜெகதீஸ், ஈஸ்வரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News